Stock News: பங்குச் சந்தையில் ‘ரெட்’ அலர்ட் நீடிப்பு - சென்செக்ஸ், நிஃப்டி சரிவு...
சர்வதேச போக்குகளின் தாக்கத்தால் இந்தியப் பங்குச் சந்தைகளில் ரெட் அலர்ட் நீடிக்கிறது. சென்செக்ஸ் நிஃப்டி புள்ளிகளில் சரிவு தொடர்கிறது.
சர்வதேச போக்குகளின் தாக்கத்தால் இந்தியப் பங்குச் சந்தைகளில் ரெட் அலர்ட் நீடிக்கிறது. சென்செக்ஸ் நிஃப்டி புள்ளிகளில் சரிவு தொடர்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 4) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 139.45 புள்ளிகள் சரிந்து 72,946.49 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 64.50 புள்ளிகள் சரிந்து 22,054.80 ஆக இருந்தது.
பங்குச் சந்தை மீள்வதற்கான எந்த நம்பிக்கையும் துளிர்க்காததால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கலக்கம் நிலவுகிறது.
இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 161.57 புள்ளிகள் (0.22%) சரிந்து 72,924.37 ஆகவும், 57.15 புள்ளிகள் (0.26%) சரிந்து 22,062.15 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ மற்றும் ஹாங்காங்கில் சரிவும், ஷாங்காய் மற்றும் சியோலில் ஏற்ற இறக்கமின்றியும் வர்த்தம் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்து பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியப் பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில், பல்வேறு அச்சங்களின் காரணமாக, மும்பை பங்குச் சந்தை முதலீட்டில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொத்துக் கொத்தாக வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக, தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் விழிச்சி கண்டு வருகின்றன.
ஏற்றம் காணும் பங்குகள்:
எஸ்பிஐ
டிசிஎஸ்
டாடா ஸ்டீல்
இண்டஸ்இண்ட் பேங்க்
பவர் கிரிட் கார்ப்
டாடா மோட்டார்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
விப்ரோ
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
இன்ஃபோசிஸ்
எம் அண்ட் எம்
பாரதி ஏர்டெல்
ஐடிசி
டெக் மஹிந்திரா
டைடன் கம்பெனி
கோடக் மஹிந்திரா பேங்க்
என்டிபிசி
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா மோட்டார்ஸ்
நெஸ்லே இந்தியா
ஆக்சிஸ் பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஏசியன் பெயின்ட்ஸ்
பாஜாஜ் ஃபின்சர்வ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா சரிந்து ரூ.87.40 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan