Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Swiggy பயனர்களை குறிவைக்கும் சைபர் மோசடியாளர்கள் - இந்த மோசடியில் இருந்து தபிப்பது எப்படி?

ஸ்விகியில் ‘லேஸி பே’ நிறுவன யுபிஐ சேவையை பயன்படுத்தி வரும் பயனர்கள் தான் இவர்களது டார்கெட். இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள ஸ்விக்கி + லேஸி பே பயனர்களுக்கு ரேண்டமாக வலை விரித்து, லட்சங்களில் பணத்தை சுருட்டியுள்ளனர்.

சம்பவம் 1: சென்னை - கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஸ்விகி பயனர் ஒருவருக்கு ஐவிஆர் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் ‘Lazy Pay’ என்ற நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளனர். நம்பத்தகுந்த அழைப்பு தானே என நம்பி அந்த பயனரும் தொடர்ந்து பேசியுள்ளார்.

உங்கள் கணக்கை பயன்படுத்தி யாரோ உணவு பர்சேஸ் செய்ய முயற்சிக்கிறார்கள்’ என அந்த அழைப்பில் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பரிவர்த்தனையை தாங்கள் மேற்கொள்ளவில்லை என்றால் தங்களுக்கு வந்துள்ள ஓடிபி எண்ணை தொலைபேசி அழைப்பிலேயே உள்ளிட்டு தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் அந்த ஓடிபி எண்ணை உள்ளிட்டுள்ளார். அதன் பிறகு, அவருடைய லேஸி பே யுபிஐ கணக்கில் இருந்து ரூ.4,979 மதிப்பிலான பரிவர்த்தனை ஸ்விகியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அந்த உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தனது நிலையை உணர்ந்த அந்த பயனர் உடனடியாக தனது லேஸி பே யுபிஐ கணக்கை முடக்கியுள்ளார்.' 

சம்பவம் 2: சென்னை - தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஸ்விகி பயனருக்கும் இதே போன்ற அழைப்பு வந்துள்ளது. அவரிடமும் ஓடிபி கேட்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, அவரது மொபைல் எண்ணுக்கு 100-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் வந்துள்ளது. இறுதியாக அவருக்கு யார் என்றே தெரியாத நபர் ஒருவர், ரூ.9,938-க்கு ஸ்விகியில் லேஸி பே மூலம் ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டர் குருகிராம் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது போல, ஸ்விக்கி பயனர்களை குறிவைத்து தொடர்ந்து இணையவழி மோசடியாளர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதில் சுமார் 30 பேர் பணத்தை இழந்துள்ளனர். இந்த ஸ்விக்கி மோசடி குறித்தும், அதில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்தும் விரிவாகப் பார்ப்போம். 

Swiggy1

ஸ்விக்கி பெயரில் ஆன்லைன் பண மோசடி

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் பசித்த நேரத்தில் பிடித்த உணவினை ருசித்திட உதவுகின்றன ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள். இதில் ஆர்டர் செய்தால் அவரவரின் இருப்பிடத்துக்கே உணவு டெலிவரி செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள உணவு டெலிவரி நிறுவனங்களில் ஸ்விக்கி நிறுவனம் உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான ஆர்டர்கள் இதில் மேற்கொள்ளப்படுகின்றன. 

இத்தகைய சூழலில் இதிலும் சைபர் மோசடியாளர்கள் தங்களது வலையை விரித்துள்ளனர். ஸ்விக்கியில் ‘லேஸி பே’ நிறுவன யுபிஐ சேவையை பயன்படுத்தி வரும் பயனர்கள் தான் இவர்களது டார்கெட். இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள ஸ்விக்கி + லேஸி பே பயனர்களுக்கு ரேண்டமாக வலை விரித்துள்ளனர். அதன் மூலம் மோசடியாளர்கள் ஆதாயமும் அடைந்துள்ளனர். 

அது என்ன லேஸி பே?

பயனர்களுக்கு டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனம் தான் லேஸி பே. இதில் துரிதமாக மிக எளிதான முறையில் பயனர்கள் கடன் பெறலாம். இந்நிறுவனம் வழங்கும் டிஜிட்டல் கிரெடிட்டை யுபிஐ-யிலும் பயனர்கள் பயன்படுத்தலாம். 15 நாட்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குகிறது. அதற்குள் அந்த கடன் தொகையை பயனர்கள் திரும்ப செலுத்த வேண்டும். 

ஸ்விக்கி உட்பட இந்தியாவில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வரும் சுமார் 250+ முன்னணி செயலிகளில் லேஸி பேவை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Swiggy

இந்த மோசடி எப்படி மேற்கொள்ளப்படுகிறது?

பயனர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் மோசடியாளர்கள் ஐவிஆர் அழைப்புகளை பயன்படுத்துகின்றனர். பயனர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அறியாத வகையில் இந்த ஏற்பாடு என தமிழக காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

தங்களுக்கு வந்துள்ள புகார்களின் அடிப்படையில் பெரும்பாலான சம்பவங்களில் மோசடியாளர்கள் வெகு தொலைவில் இருந்து இந்த வேலையை செய்துள்ளனர் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது. டெல்லி, குருகிராம் போன்ற பகுதிகளில் இருந்து அதிகம் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அசல் பயனரின் கணக்கில் இருந்து உணவு மற்றும் மது வகைகளை ஆர்டர் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பயனர் தரவுகள் கசிந்தது இதற்கு அடிப்படை காரணமாக இருக்கலாம், என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஸ்விகி கஸ்டமர் சேவை மோசடியில் ரூ.3 லட்சம் இழந்த நபர்:

இன்ஸ்டா மற்றும் எக்ஸ் தள இன்ஃப்ளூயன்சரான நிகில் சாவ்லா, என்பவரின் தந்தை ஸ்விக்கி கஸ்டமர் சேவை மோசடியில் சிக்கி ரூ.3 லட்சத்தை இழந்துள்ளார். அது குறித்து தகவலை நிகில் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். 

நிகில் சாவ்லாவின் தந்தை ஸ்விக்கியில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், நீண்ட நேரமான பிறகும் அவருக்கான ஆர்டர் கிடைக்கவில்லை. அது தொடர்பாக ஸ்விக்கி கஸ்டமர் கேரை அவர் தொடர்பு கொள்ள முடிவு செய்துள்ளார். கூகுளில் ஸ்விக்கி கஸ்டமர் கேர் எண்ணை தேடி பிடித்து, தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பின்னர், அவரது கணக்கில் இருந்து ரூ.35,000 குறைந்துள்ளது. அதை அறிந்து அவர் பதறியுள்ளார். 

மீண்டும் அதே எண்ணை உதவிக்காக தொடர்பு கொண்டுள்ளார். இந்த முறை அவரது கிரெடிட் கார்டு விவரங்களை பெற்று ரூ.3 லட்சம் எடுத்துள்ளனர். 

இந்த தகவலை அந்த வீடியோவில் நிகில் பகிர்ந்துள்ளார். மேலும், தொழில்நுட்பம் குறித்து அதிகம் அறியாத மூத்த குடிமக்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார். தான் மலேசியாவில் இருக்கின்ற காரணத்தால் டெல்லி போலீஸாரின் உதவி இந்த விவகாரத்தில் தங்களுக்கு வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். 

swiggy cybercrime

ஸ்விகியின் விளக்கம் என்ன? - ஸ்விக்கி கஸ்டமர் கேர் அல்லது உதவி எண் என்று எதுவும் இல்லை. எந்தவொரு தருணத்திலும் ஸ்விக்கி அல்லது அதன் பிரதிநிதிகள் என யாரும், எப்போதும் பயனர்களின் நிதி சார்ந்த தரவு விவரங்களை கோர மாட்டார்கள். அது போல, தங்களிடம் யாரேனும் விவரம் கேட்டால் பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அது மோசடியாளர்களின் சூழ்ச்சி. பயனர்களுக்கு ஸ்விக்கி தரப்பில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ‘ஸ்விக்கி செயலி’-யில் உள்ள ஹெல்ப் பிரிவை அணுகலாம் என தெரிவித்துள்ளது. 

பாதுகாப்பாக இருப்பது எப்படி? - ஸ்விகி தரப்பில் பயனர்களிடத்தில் இருந்து நிதி சார்ந்த எந்த விவரமும் கேட்கப்படாது. மேலும், வாடிக்கையாளர் உதவி எண் என்று எதுவும் இல்லை என ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இதனை பயனர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இணையவழி மோசடிகள் அனைத்தும் பயனர்கள் வழங்கும் தகவலின் அடிப்படையில் மட்டுமே அரங்கேறுகிறது. 

மேலும், ஐவிஆர் அழைப்புகளில் கேட்கப்படும் ஓடிபி எண்ணை பகிராமல் இருக்க வேண்டும். இதனை பல்வேறு சமயங்களில் சைபர் வல்லுநர்களும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றனர். 


Edited by Induja Raghunathan