Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பணம் ‘சேர்க்க’ ஆசையா? - நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 பழக்க வழக்கங்கள்!

உங்கள் பொருளாதார நிலைக்கான அடித்தளத்தை புதிதாகத் தொடங்கினாலும் சரி அல்லது அதை வலுப்படுத்த விரும்பினாலும் சரி, புத்திசாலித்தனமான நிதிப் பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்வதே நீண்டகால செழிப்புக்கான திறவுகோலாகும்.

பணம் ‘சேர்க்க’ ஆசையா? - நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 பழக்க வழக்கங்கள்!

Friday March 21, 2025 , 3 min Read

பணம் ஈட்டுவதில் வெற்றி என்பது ஒரே இரவில் ஏற்பட்டுவிடும் ஒன்று அல்ல. அது சரியான பழக்கங்களை வளர்ப்பதன் மூலம் காலப்போக்கில் நிலையாக இருப்பது.

உங்கள் பொருளாதார நிலைக்கான அடித்தளத்தை புதிதாகத் தொடங்கினாலும் சரி அல்லது அதை வலுப்படுத்த விரும்பினாலும் சரி, புத்திசாலித்தனமான நிதிப் பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்வதே நீண்டகால செழிப்புக்கான திறவுகோலாகும்.

உங்களின் பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டமைக்க உதவும் 5 அடிப்படை நடைமுறைகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவை உங்களை ஒரே வருடத்திற்குள் கோடீஸ்வரர் ஆக்க உறுதியளிக்காவிட்டாலும், சந்தேகத்திற்கு இடமின்றி உங்களை பொருளாதார சுதந்திரத்தை நோக்கிய பாதையில் வழிநடத்தும்.

money

படம்: மெட்டா ஏஐ

1) வலுவான பட்ஜெட் கட்டமைப்பை உருவாக்குங்கள்

ஒரு திடமான பட்ஜெட் என்பது பொருளாதார ஸ்திரத்தன்மையின் மூலதனமாகும். உங்கள் பணம் எங்கு செல்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதன் மூலம், உங்கள் இலக்குகளுடன் ஒத்துப்போகும் வரைபடத்தை நீங்கள் உருவாக்கலாம்.

செலவினங்களைக் கண்காணிக்கவும்: உங்கள் செலவுகளைக் கண்காணிக்க பட்ஜெட் மென்பொருள் அல்லது செயலிகளை பயன்படுத்தலாம். இவை, நீங்கள் குறைத்து சேமிக்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காண உதவும்.

50/30/20 விதியை செயல்படுத்தவும்:

உங்கள் வருமானத்தில் 50% அத்தியாவசிய தேவைகளுக்கும், 30% விருப்பச் செலவுகளுக்கும், 20% சேமிப்பு அல்லது கடன் திருப்பிச் செலுத்துதலுக்கும் ஒதுக்குங்கள். இந்த அமைப்பு உங்கள் நிதி இலக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும்போது சமநிலையை உறுதி செய்கிறது.

தொடர்ந்து மதிப்பாய்வு செய்யவும்: வருமானம் அல்லது செலவுகளில் ஏற்படும் மாற்றங்களை சரிசெய்ய ஒவ்வொரு மாதமும் உங்கள் பட்ஜெட்டை மறு மதிப்பீடு செய்யவும்.

2) விரைவான மற்றும் உத்தி ரீதியான முதலீடு

முதலீடு என்பது காலப்போக்கில் உங்கள் செல்வத்தை வளர்ப்பதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். பலன்கள் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும், இப்போதே தொடங்குவது என்பது நீண்டகால வளர்ச்சிக்கு வித்திடும்.

உங்கள் போர்ட்ஃபோலியோவை பன்முகப்படுத்தவும்: நிலையான வளர்ச்சியை அடையும் அதே வேளையில் ஆபத்தை குறைக்க குறைந்த விலை குறியீட்டு நிதிகள், ETF-கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளுங்கள்.

ரியல் எஸ்டேட்: வாடகை சொத்துக்கள் அல்லது ரியல் எஸ்டேட் முதலீடு உள்ளிட்டவை நீண்ட கால வருமானத்தையும் மூலதன மதிப்பையும் உறுதி செய்யும்.

தானியங்கி முதலீடுகள்: Wealthfront அல்லது Acorns போன்ற தளங்கள் நிலையான கவனம் செலுத்த அவசியமின்றி தொடர்ந்து முதலீடு செய்வதை எளிதாக்குகின்றன.

money

படம்: மெட்டா ஏஐ

3) வருமானத்தை பன்முகப்படுத்துதல்

ஒரே வருமான ஆதாரத்தை மட்டுமே நம்பியிருப்பது பற்றாக்குறையை ஏற்படுத்தலாம். பல வருமான வழிகளை உருவாக்குவதன் மூலம், உங்கள் பொருளாதார பாதுகாப்பை அதிகரித்து, உங்கள் செல்வத்தை உருவாக்கும் பயணத்தை துரிதப்படுத்த உதவும்.

கூடுதல் வேலையில் கவனம் செலுத்துக: கூடுதல் வருமானத்தை ஈட்ட உங்கள் திறமைகள் அல்லது பொழுதுபோக்குகளைப் பயன்படுத்துங்கள். ஃப்ரீலான்ஸ் எழுத்து, கிராஃபிக் வடிவமைப்பு அல்லது ஆன்லைன் படிப்புகளை கற்பித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

செயலற்ற வருமானத்தை உருவாக்குங்கள்: டிஜிட்டல் தயாரிப்புகளை உருவாக்குதல், ஈவுத்தொகை செலுத்தும் பங்குகளில் முதலீடு செய்தல் அல்லது யூடியூப் சேனல் தொடங்குதல் போன்றவற்றை கருத்தில் கொள்ளுங்கள்.

பணமாக்குதல் நிபுணத்துவம்: Upwork அல்லது Fiverr போன்ற தளங்கள் மூலம் ஆலோசனை அல்லது ஃப்ரீலான்சிங் சேவைகளை வழங்கலாம்.

4) அதிக வட்டி கடனை சமாளிக்கவும்

கடன் உங்கள் பொருளாதார முன்னேற்றத்தை கணிசமாகத் தடுக்கக் கூடும். அதிக வட்டி கடன்களை அடைப்பது உங்கள் செல்வத்தை மேம்படுத்தும் உத்தியில் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

அதிக வட்டி கடன்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்: வட்டி செலவுகளைக் குறைக்க முதலில் கிரெடிட் கார்டு கடன் மற்றும் பிற அதிக வட்டி கடன்களை அடைப்பதில் கவனம் செலுத்துங்கள்.

திருப்பிச் செலுத்தும் உத்தியைத் தேர்வுசெய்யவும்: ‘ஸ்னோபால்’ முறை (சிறிய கடன்களை முதலில் செலுத்துதல்) அல்லது பனிச்சரிவு முறை (அதிக வட்டி கடன்களை முதலில் குறிவைத்தல்) ஆகியற்றை பயன்படுத்தவும்.

கடன் ஒருங்கிணைப்பைக் கருத்தில் கொள்ளுங்கள்: திருப்பிச் செலுத்துவதை எளிதாக்கவும் பணத்தை மிச்சப்படுத்தவும் பல கடன்களை குறைந்த வட்டி விகிதத்தில் ஒரே கடனாக இணைக்கவும்.

5) நிதிக் கல்வியில் முதலீடு செய்யுங்கள்

நிதிக் கல்வியறிவு என்பது ஒரு கேம் சேஞ்சர். பண மேலாண்மை, முதலீடு மற்றும் செல்வத்தை உருவாக்குதல் பற்றி தொடர்ந்து கற்றுக்கொள்வதன் மூலம், நீங்கள் சிறந்த முடிவுகளை எடுக்க எப்போதும் தயாராக இருப்பீர்கள்.

money

படம்: மெட்டா ஏஐ

பரவலான கற்றல்: வலுவான அடித்தளத்தை உருவாக்க, 'The Richest Man in Babylon' அல்லது 'Rich Dad Poor Dad' போன்ற புத்தகங்களை படிக்கத் தொடங்குங்கள்.

ஆன்லைன் கோர்ஸ்: Coursera அல்லது Skillshare போன்ற தளங்கள் தனிப்பட்ட நிதி மற்றும் முதலீடு குறித்த படிப்புகளை வழங்குகின்றன.

நிபுணர்களைப் பின்தொடரவும்: புகழ்பெற்ற நிதி கல்வியாளர்களால் நடத்தப்படும் வலைப்பதிவுகள், பாட்காஸ்ட்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் எப்போதும் அப்டேட் உடன் இருங்கள்.

குறுக்கு வழிகளிலோ அல்லது உத்தரவாதமான முடிவுகளுடனோ நிலையான செல்வத்தை எப்போதும் உருவாக்க முடியாது. அதற்கு நிதி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பழக்கங்களை வளர்ப்பது முக்கியம். ஒரு பட்ஜெட்டை உருவாக்கி, அதை உத்தி ரீதியாக முதலீடு செய்வதன் மூலம், உங்கள் வருமானத்தை பன்முகப்படுத்துவதன் மூலம், கடனை நீக்குவதன் மூலம், நிதிக் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், நீங்கள் ஒரு வளமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கலாம்.

ஒரு வருடத்திலேயே ‘கோடீஸ்வரர்’ அந்தஸ்தை அடைய முடியாவிட்டாலும், இந்த நடைமுறைகள் உங்களை நிலையான பொருளாதார வெற்றிக்கு இட்டுச் செல்லும். இந்த பயணத்திற்கு பொறுமையும் ஒழுக்கமும் அவசியம் தேவை. அவற்றுக்கு நிச்சயம் சன்மானம் உண்டு. இன்றே தொடங்கி, உங்கள் பொருளாதார விதியைக் கட்டுப்படுத்துங்கள்.

மூலம்: சானியா அகமது கான்




Edited by Induja Raghunathan