Stock News: பங்குச் சந்தையில் பாசிட்டிவ் போக்கு நீடிப்பு - காரணம் என்ன?
ஆசியப் பங்குச் சந்தைகளின் ஏற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வத்தின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தையில் பாசிட்டிவ் போக்கு நீடிக்கிறது.
ஆசியப் பங்குச் சந்தைகளின் ஏற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வத்தின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தையில் பாசிட்டிவ் போக்கு நீடிக்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 19) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 172.43 புள்ளிகள் உயர்ந்து 75,473.69 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 22,888.30 ஆக இருந்தது.
கடந்த மூன்று தினங்களாக பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
இன்று பிற்பகல் 12.40 மணியளவில் சென்செக்ஸ் 185.20 புள்ளிகள் (0.25%) உயர்ந்து 75,486.45 ஆகவும், நிஃப்டி 81.00 புள்ளிகள் (0.35%) உயர்ந்து 22,915.30 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
ஆசிய பங்குச் சந்தைகளின் சாதகப் போக்கு எதிரொலியால் இந்திய பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் நிலவுகிறது. அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. அதேவேளையில், ஆசிய பங்குச் சந்தைகளான டோக்கியோ, சியோல், ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் ஏறுமுகம் காணப்படுகிறது.

இதன் தாக்கம் மட்டுமின்றி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியப் பங்குச் சந்தைகளின் ஆர்வம் காட்ட தொடங்கியிருப்பதால் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன.
ஏற்றம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
என்டிபிசி
இண்டஸ்இண்ட் பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
எஸ்பிஐ
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
எல் அண்ட் டி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டாடா மோட்டார்ஸ்
பாரதி ஏர்டெல்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
மாருதி சுசுகி
கோடக் மஹிந்திரா பேங்க்
விப்ரோ
ஐடிசி
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இன்போசிஸ்
டெக் மஹிந்திரா
டிசிஎஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்து ரூ.86.66 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan