Stock News: பங்குச் சந்தையில் எழுச்சி - சென்செக்ஸ் 800+ புள்ளிகள் உயர்வு!
சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவி வரும் சாதகமான போக்குகள், வங்கி நிறுவனப் பங்குகளுக்கு கூடிய மவுசு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் எழுச்சி நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்துள்ளன.
சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவி வரும் சாதகமான போக்குகள், வங்கி நிறுவனப் பங்குகளுக்கு கூடிய மவுசு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் எழுச்சி நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்துள்ளன. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 18) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 490.12 புள்ளிகள் உயர்ந்து 74,660.07 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 162.55 புள்ளிகள் உயர்ந்து 22,671.30 ஆக இருந்தது.
கடந்த இரு தினங்களாக பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 802.57 புள்ளிகள் (1.08%) உயர்ந்து 74,972.52 ஆகவும், நிஃப்டி 241.15 புள்ளிகள் (1.07%) உயர்ந்து 22,749.90 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
சர்வதேச பங்குச் சந்தைகளின் சாதகப் போக்கு எதிரொலியால இந்திய பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க ஏற்றம் நிலவுகிறது. அமெரிக்க பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, சியோல், ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் ஏறுமுகம் காணப்படுகிறது. இதன் தாக்கத்தால் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்தன. அதேபோல், வங்கி நிறுவனப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வமும் மற்றொரு காரணம்.

ஏற்றம் காணும் பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்
சன் பார்மா
எம் அண்ட் எம்
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
இன்போசிஸ்
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
என்டிபிசி
ஐடிசி
டிசிஎஸ்
எஸ்பிஐ
ஏசியன் பெயின்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
விப்ரோ
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பாரதி ஏர்டெல்
பஜாஜ் ஃபின்சர்வ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து ரூ.86.71 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan