Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

கோல்ட்மேன் சாச்ஸ் வேலையை விட்டுவிட்டு அம்மாவுடன் இட்லி கடை நடத்தி வரும் கிருஷ்ணன்!

29 வயதான கிருஷ்ணன் மகாதேவன் Goldman Sachs நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் அப்பா ஆரம்பித்த இட்லி கடையை நடத்தி வருகிறார்.

கோல்ட்மேன் சாச்ஸ் வேலையை விட்டுவிட்டு அம்மாவுடன் இட்லி கடை நடத்தி வரும் கிருஷ்ணன்!

Wednesday May 18, 2022 , 2 min Read

முதலீட்டு வங்கித் துறையில் வேலை பார்க்கும் பலருக்கும் பிரபல முதலீட்டு நிறுவனமான Goldman Sachs நிறுவனத்தில் வேலை பார்க்கவேண்டும் என்கிற கனவு நிச்சயம் பலருக்கு இருக்கும்.

இந்த கனவு வேலையை உதறிவிட்டு இட்லி வணிகத்தில் ஒருவர் ஈடுபட்டு வருகிறார் என்று சொன்னால் நம்புவீர்களா?

29 வயதான கிருஷ்ணன் மகாதேவன் Goldman Sachs நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த தொழிலில் முழுவீச்சில் களமிறங்கிவிட்டார். இவரது கடையின் பெயர் ’ஐயர் இட்லி’. பெங்களூரு விக்யான் நகரில் இந்தத் தொழில் செய்து வருகிறார்.

2001ம் ஆண்டு கிருஷ்ணனின் அப்பா மகாதேவன், ’ஐயர் இட்லி’ என்கிற பெயரில் இட்லி தொழில் செய்ய ஆரம்பித்தார். அப்போதிருந்து பெங்களூருவில் இந்த இட்லி கடை செயல்பட்டு வருகிறது.

1

கிருஷ்ணன் Goldman Sachs நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். மகாதேவனின் மறைவிற்குப் பின்னர் கிருஷ்ணன் வேலை செய்தவாறே தன் அம்மாவிற்கு இட்லி தொழிலிலும் உதவி வந்தார்.

அலுவலக வேலை 15 மணி நேரம் நீடிக்க, அதன் பிறகு நான்கு மணி நேரம் இட்லி வணிகத்திற்காக உழைத்தார். கொரோனா 2020ம் ஆண்டு பெருந்தொற்று சமயத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டு இட்லி கடையை நடத்துவது என்கிற முடிவிற்கு வந்தார்.

2009ம் ஆண்டு மகாதேவன் உயிரிழந்தார். கிருஷ்ணனும் அவரது அம்மா உமாவும் சேர்ந்து கடையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அந்த சமயத்தில் கிருஷ்ணன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.

கல்லூரி நேரம் முடிந்து வீடு திரும்பும் கிருஷ்ணன், அம்மாவிற்கு இட்லி கடையில் உதவி செய்வார்.

படிப்பு முடித்ததும் உதவி பேராசிரியராக ஓராண்டு வரை பணியாற்றினார். அதன் பிறகு, Time Inc நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பிறகு Goldman Sachs நிறுவனத்தில் நான்காண்டுகள் வரை பணியாற்றினார்.

இப்படி அலுவலக வேலைகளுடன் சேர்த்து அம்மாவுடன் இட்லி கடையிலும் வேலை பார்த்ததால் வேலை பளு அதிகரித்தது. எனவே, வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.

கார்ப்பரேட் வேலையை விட்டு விலக அவரது அம்மா எளிதில் ஒப்புக்கொள்ளவில்லை. கிருஷ்ணனின் முடிவை அவரது அம்மா ஏற்றுக்கொள்ள கிட்டதட்ட இரண்டாண்டுகள் ஆனது.

அதைத் தொடர்ந்து வேலையை ராஜினாமா செய்தார். இன்று தரமான, சாஃப்டான இட்லியை விற்பனை செய்து வருகிறார்.

தரமான அரிசியையும் பருப்பையும் வாங்கி ஊறவைத்து, அரைத்து, 8 முதல் 9 மணி நேரம் புளிக்கவைத்து இட்லி தயாரிக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் 250 கிலோ அரிசியும் 120 கிலோ உளுந்தும் பயன்படுத்துவதாக கிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

தினமும் கிட்டத்தட்ட 400 பேர் கடைக்கு வந்து உணவருந்தி செல்கின்றனர். வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கிறது.

அம்மாவிற்கு வயதாகிவிட்டதால் அவரை ஓய்வெடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார் கிருஷ்ணன். தற்போது கிருஷ்ணன் ஏழு பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து அப்பாவின் தொழில் முயற்சியை சிறப்பாக நடத்தி வருகிறார்.

தரமான உணவை நியாயமான விலையில் வழங்கி வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தவேண்டும் என்பதே கிருஷ்ணனின் நோக்கம். இதே நோக்கத்துடன் மேலும் விரிவடையவும் திட்டமிட்டிருக்கிறார்.

கட்டுரை: ஹிந்தி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா