Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

2024 ஆண்டில் ஐபிஓ முதலீடுகள் - அதிக பலன் பெற கவனிக்க வேண்டிய 6 அம்சங்கள்!

இந்த ஆண்டு பல பங்கு வெளியீடுகள் காத்திருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் முடிவு எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள் உள்ளன.

2024 ஆண்டில் ஐபிஓ முதலீடுகள் - அதிக பலன் பெற கவனிக்க வேண்டிய 6 அம்சங்கள்!

Monday January 22, 2024 , 2 min Read

ஐபிஓ வாய்ப்புகள் ஈர்க்கத்துவங்கியுள்ளன. கடந்த ஆண்டு பல ஸ்டார்ட் அப்கள் பொது பங்குகளை வெளியிட்டன. மும்பை பங்குச்சந்தை தகவல்படி, நவம்பர் மாதம் வரை 91 வெளியீடுகள். இவற்றில் 40 மெயின்போர்ட் பட்டியலிடுதலாக அமைந்தவை.

பங்குச்சந்தை சார்ந்த இணையதளமான Chittorgarh தகவல்படி, 2023ல் 57 பொது வெளியீடுகள் ரூ.49,437 கோடி ஈட்டின. இத்தனை வெளியீடுகளுக்கு பலவித காரணங்கள் இருந்தாலும், 2024ம் ஆண்டில் லாபம் பார்க்கும் வாய்ப்பை முதலீட்டாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.  

ஏனெனில், இதே போக்கு இந்த ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வெளியீடுகள் அதிக வாய்ப்புகளை அளிக்கும் நிலையில், வெற்றிகரமாக முதலீடு செய்வது என்பது, ஒவ்வொரு வெளியீட்டின் நுட்பங்களை புரிந்து கொண்டு தகவல் சார்ந்த சரியான முடிவு எடுப்பதில் இருக்கிறது. ஐ.பி.ஓ எனும் பொது பங்கு வெளியீடுகளை அணுகும் போது, அவற்றை அலசி ஆராய்ந்து புரிந்து கொள்வது முக்கியம்.

IPO

ஐபிஓ முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

1. ஐபிஓ காரணம்

முதல் அம்சம், நிறுவனம் பங்குகளை வெளியிடுவதற்கான காரணம் என்ன என்பதை அறிவது. திரட்டப்படும் நிதியை நிறுவனம் தனது வர்த்தகத்திற்காக எப்படி பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது என்பதில் இருந்து இதை துவங்கலாம். நிறுவனங்கள் முதலீடு திரட்டும் முன், செபியிடம் வரைவு ரெட் ஹெரிங் பிராஸ்பெக்டஸ் ஆவணத்தை அளிக்கும்.

இந்த ஆவணத்தில் முதலீடு தொடர்பான இடர்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆக, நிறுவனம் நிதியை கடனை அடைக்க பயன்படுத்த உள்ளதா, வர்த்தக விரிவாக்கதிற்கு பயன்படுத்த உள்ளதா என பார்க்கவும். நிறுவனம் ஏன் பங்குகளை வெளியிடுகிறது எனும் நோக்கத்தை அறிவதன் மூலம், வாய்ப்பை திறம்பட பரிசீலிக்கலாம்.

2. வர்த்தக மாதிரி

ஒரு முதலீட்டாளராக, ஒரு நிறுவனத்தின் வர்த்தக மாதிரியை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நிறுவனத்தின் கருத்தாக்கம், வர்த்தக மாதிரி, சந்தை பரப்பு, எதிர்கால வாய்ப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ளவும். பங்குதாரர்களுக்கு நிறுவனத்தின் வளர்ச்சி, லாபத்தை தீர்மானிக்க கூடிய முக்கிய அம்சங்கள் இவை.

3. நிதி ஆரோக்கியம்

பொது வெளியீட்டை ஆராயும் போது நிறுவனத்தின் நிதி நிலையை ஆராய வேண்டும். நிறுவனத்தில் லாப போக்கு, அதன் தரவுகளை ஆராய வேண்டும். விற்பனையில் பிரதிபலிக்க கூடிய சந்தை ஆதிக்கத்தை நிறுவனம் பெற்றிருக்கவில்லை எனில், அந்த பங்குகளை தவிர்ப்பது நல்லது.

4. நிறுவனர்கள்

முக்கிய முடிவுகள் என்று வரும் போது, நிறுவன உரிமையாளர்களும், நிரவாகக் குழுவும் முக்கியம். எனவே, நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாக குழு பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

5. சந்தை மதிப்பீடு

எல்லா ஐபிஓக்களும் லாபமாக அமைவதில்லை. மற்ற முதலீடுகள் போலவே இந்த முதலீடும் ஏமாற்றம் அளிக்கலாம். இதற்கு முக்கியக் காரணம், அதன் மதிப்பீடு குறைவானதாக அல்லது மிகையாக இருக்கலாம் என்பது தான். நிதி பின்னணி தகவல்கள் கொண்டு நிறுவனம் தெரிவிக்கும் மதிப்பீடு சரியானதா என அறியலாம்.

6. இடர்களும், பலன்களும்

ஆவணங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கல் கொண்டு, பங்கு வெளியீடு குறித்து நீங்கள் கணிக்கலாம். ஆனால், முதலீட்டின் இடர்களையும், சந்தை செயல்பாட்டையும் மனதில் கொள்வது அவசியம். ஆற்றல், பலவீனம், வாய்ப்புகள், ஆபத்துகள் ஆகிய நான்கு அம்சங்களை பரிசீலிக்கும், ஸ்வாட் ஆய்வை மேற்கொள்ளலாம். சந்தை பங்கு, வளர்ச்சி விகிதம் போன்றவை நல்ல அறிகுறிகள்.

இறுதி முடிவு

பல பங்கு வெளியீடுகள் வரும் போது முதலீட்டாளர்களுக்கு பல வாய்ப்புகள் இருக்கும். மேலே சொன்ன அம்சங்களை முதலீடு முடிவுக்கு முன் மனதில் கொள்ள வேண்டும். நீண்ட கால முதலீடு நோக்கம் எனில் குறிப்பாக நிதி பின்னணி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வது அவசியம்.


Edited by Induja Raghunathan