Stock News: இந்திய பங்குச் சந்தையில் மீட்சி - சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!
சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவி வரும் சாதகமான போக்குகளின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வெகுவாக மீண்டு எழுந்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளன.
சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவி வரும் சாதகமான போக்குகளின் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தை வெகுவாக மீண்டு எழுந்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்ந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 17) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 363.67 புள்ளிகள் உயர்ந்து 74,192.58 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 115.3 புள்ளிகள் உயர்ந்து 22,512.50 ஆக இருந்தது.
கடந்த வாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்த பங்குச் சந்தை வர்த்தகம் இப்போது மீண்டிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை தந்துள்ளது.
இன்று முற்பகல் 10.50 மணியளவில் சென்செக்ஸ் 287.67 புள்ளிகள் (0.39%) உயர்ந்து 74,116.58 ஆகவும், நிஃப்டி 83.75 புள்ளிகள் (0.37%) உயர்ந்து 22,480.95 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
சர்வதேச பங்குச் சந்தைகளின் சாதகப் போக்கு எதிரொலியால இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் மீளத் தொடங்கியுள்ளது. அமெரிக்க பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, சியோல், ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் ஏறுமுகம் காணப்படுகிறது. இதன் தாக்கத்தால் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயரத் தொடங்கியுள்ளன.
ஏற்றம் காணும் பங்குகள்:
இண்டஸ்இண்ட் பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
சன் பார்மா
எம் அண்ட் எம்
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
பாரதி ஏர்டெல்
கோடக் மஹிந்திரா பேங்க்
இன்போசிஸ்
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
என்டிபிசி
ஐடிசி
டிசிஎஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எஸ்பிஐ
ஏசியன் பெயின்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
விப்ரோ
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா உயர்ந்து ரூ.86.80 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan